இலங்கை வந்தடைந்தது ஜப்பான் மருந்துவில்லை

5 d
5 d

கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஜப்பான் வழங்கிய ‘எவிகன்’ எனப்படும் மருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளை ஜப்பான், இலங்கைக்கு வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.