ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களர்களும் இராசாய உரத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் இலங்கையின் ஜனாதிபதி அதற்கு முற்றிலும் உடண்படவில்லை.
இராசாய உரப்பாவனை காரணமாக சிறுநீரக நோய் அதிகரிப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சஜித், கோத்தாபயவின் இலவச இரசாயன திட்டத்திற்கு தான் உடண்படவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தல் என்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பு என்றாலும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் இராசாய உரங்களுக்கு பதிலான இயற்கை பசளையை பயன்படுத்தும் வகையிலான கொள்கையை உருவாக்கி நாடு பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.