கோட்டாபயவை தோற்கடிப்போம்!!

x
x

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை அல்லவென்றும் கோட்டாபயவை மக்கள் நீதிமன்றம் மூலம் தோற்கடிப்போம் எனவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைப் பிரஜைகள் மட்டுமே போட்டியிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.