முப்படையினருடன் இணைந்து சட்டவிரோத மண் அகழ்வினை தடுக்கும் விசேட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நேற்று (20) நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தலைவர் சதாசிவம் கனகரத்தினம் தலைமையில் மாவட்ட செயலாளரின் ஒழுங்குபடுத்தலில் நேற்று மாலை 2.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள்,பொலீசார், முப்படையை சேர்ந்தவர்கள் பிரதேசசபைத் தலைவர்கள், கனியவளத் திணைக்களத்தினர் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இதில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் சட்டவிரோத மண் அகழ்வினை தடுக்கும் விசேட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.