பகிடிவதையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்று(10) ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக நிர்வாகம் விசாரணைகளின் முடித்துள்ளதாக தெரிவித்த அவர் , பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் விபரங்களை அவர்கள் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் மாணவிகளின் அடிப்படை உரிமைகள் பேணப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் சரியாக நடைபெற அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சீரழிந்து போயுள்ள நமது சமூகத்தை மீள கட்டியெழுப்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் இது தொடர்புடைய தகவல்கள் வழங்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.