விடுதலையாகிறார் முன்னாள் முதலமைச்சர்?

pillayan
pillayan

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச அவர்கள் பதவியேற்றவுடன் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான எனப்படும் சந்திரகாந்தன் விடுதலை செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பிள்ளையான் விடுதலை செய்யப்படுவார் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்ச அவர்கள் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய தமது தலைவர் விடுதலை செய்யப்படுவார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்க் குரலுக்கு தெரிவித்தார்.