இந்திய குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் இன்று காலை நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இந்தியாவின் 71-ஆவது தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன.
இந்திய குடியரசு தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான டெல்லி – ராஜபாத்த்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிரேசில் ஜனாதிபதி போல்சனரோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர்கள் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.