அடுத்த படத்தை இயக்க ரெடி ஆகிவிட்ட பாலா!

12 bala34343 600 jpg
12 bala34343 600 jpg

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து வைத்திருந்த பாலா சமீபத்தில் தெலுங்கு பட ரீமேக்கை இயக்கி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். மிகவும் மட்டமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

இதனால் ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாக முடியாது என பலரும் பல்வேறு விதமாக பேசிய நிலையில், நான் குருவி இல்லை பருந்துதான் என நிரூபிக்க புதிய கூட்டணியில் இரண்டு நடிகர்களை வைத்து அடுத்த படத்தை இயக்க ரெடி ஆகிவிட்டாராம் பாலா.

வழக்கமாக பாலா படங்களுக்கு இளையராஜாதான் இசையமைப்பார். அவன் இவன் மற்றும் பரதேசி போன்ற படங்களுக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜாவும், ஜீவி பிரகாஷும் இசையமைத்தனர். இந்நிலையில் தற்போது அதர்வா மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரையும் வைத்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் செய்துள்ளாராம்.

மேலும் தன்னுடைய ஆஸ்தான இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பதிலாக தற்போது முதல் முறையாக ஏ ஆர் ரகுமான் உடன் கூட்டணி சேர்ந்து உள்ளாராம். சமீபகாலமாக ஏ ஆர் ரகுமான் ஸ்டைலிஷ் படங்களுக்கு இசையமைத்த நிலையில் முதல் முதலில் ஒரு கிராமத்து படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.

இதுவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பாலாவிடம் ஏ ஆர் ரகுமான் உங்களுடைய படங்களில் பணியாற்ற ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதுதான் போதும் உடனடியாக கட்டிப்பிடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உங்களுக்கே தருவதாக சத்தியமே செய்து கொடுத்து விட்டாராம்.