மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு கொரோனா பாிசோதனை

coronavirus66 1594465073
coronavirus66 1594465073

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரெபிட் அன்டிஜன்ட் பாிசோதனைகள் இன்றும் (19) மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல் துறை தொிவிக்கின்றது.

இதனடிப்படையில் கொழும்பு, புத்தளம் மார்க்கத்தில் கொச்சிக்கடை பிரதேசத்திலும், ஹைலெவல் மார்க்கத்தில் சாலாவ பிரதேசத்திலும் கண்டி வீதியில் நிட்டம்புவ பிரதேசத்திலும் இக்குறித்த பாிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

நேற்று ஆரம்பமாக இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 451 பேருக்கு இப்பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு அதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேலும் இரு வாரங்களுக்கு ரெபிட் அன்டிஜன்ட் பாிசோதனைகளை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சு தொிவிக்கின்றது.