.
தென்னாபிரிக்காவில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 538பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில், இதுவரை 24ஆயிரத்து 284பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 725பேர் பாதிக்கப்பட்டதோடு, 274பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 93ஆயிரத்து 435பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை ஏழு இலட்சத்து 83ஆயிரத்து 818பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.