இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Rainning
Rainning

இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரித்து பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.