சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இன்றைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் மீள திறக்கப்படுகின்றன.
திரையரங்குகளை உரிய முறையில் தொற்றுநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு திரையரங்குகளுக்கு வருகைத் தருவோரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.