அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் கொரோனா தொற்றினால் 46 வயதுடைய ஒருவர் இன்று வியாழக்கிழமை (07) உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அம்பாறை உகன பிரதேசத்தைச் சோந்த குறித்த நபர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதுடன் கிழக்கில் உயிரிழந்தேர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.