வவுனியா மஸ்தியஸ்த சபையின் செயற்பாடுகள் இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெறும் என அதன் தலைவர் சி.வரதராசா தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் வழமையாக வவுனியா சைவப்பிரகாசா மகளீர் வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் 30 மற்றும் 6 ஆம் திகதிகளின் அமர்வுகள் இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெறும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
குறித்த இரு அமர்வுகளின் பின்னர் வழமை போல சைவப்பிரகாசா மகளீர் வித்தியாலயத்தில் மஸ்தியஸ்த சபையின் செயற்பாடுகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.