மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியானது மே மாதம் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தத் தொடர் உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும்.
உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கை அணி மே மாதம் வரும்” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் நடவடிக்கை தலைவர் அக்ரம் கான் புதன்கிழமை சட்டோகிராமில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.