சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இராணுவ வைத்தியலையில் வைத்து இன்று (புதன்கிழமை) அவர் கொரோனா தடுப்பூசியை பெற்றுகொண்டள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவும் கலந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் திட்டம் நேற்று ஆரம்பமாகியிருந்த நிலையில் இதுவரை 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.