கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக நாடு மீள திறக்கப்பட்டத்திலிருந்து இதுவரை 3820 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் யுக்ரேனில் இருந்தே பிரவேசித்துள்ளனர்.
இதற்கமைய யுக்ரேனில் இருந்து 1,374 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதுதவிர, கசகஸ்தானில் இருந்து 526 சுற்றுலா பயணிகளும், இந்தியாவிலிருந்து 443 சுற்றுலா பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் எயார் அரேபியா, ப்லை டுபாய், சலாம் எயார் ஆகிய வான் சேவைகள் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.
ஜசீரா, கல்ப் எயார் ஆகிய விமான சேவைகள் இலங்கையுடான நேரடி வானுர்தி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.