கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி அளவு 16.3 சதவீதத்தினால் அதிகரித்து 675 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
நாணய மாற்றுவீதத்தின் படி, இந்த தொகை 22.1 சதவீத வளர்ச்சியாக கருதப்படுகின்றது.
வெளிநாட்டில் வசிக்கின்ற இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் குறைந்து விட்டாலும் கடந்த ஆண்டில் மாத்திரம் அவர்கள் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக தொகை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை அனுப்பினர்.