நாட்டில் கடந்த ஆண்டில் போதைப் பொருள் மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஆண்டில் மாத்திரம் 61 ஆயிரத்து 550 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்த்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் ஆயிரத்து 610 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் காவல்த்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்களில் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக பிரதிப் காவல்த்துறைமா அதிபர் தெரிவத்துள்ளார்.