சிறுமி வன்புனர்வு- குற்றவாளிகளின் விளக்கமறியல் நீடிப்பு

child abuse
child abuse

சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டர் சந்தேகநபர்கள் இருவரையும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் 15ஆம் திகதி கோப்பாய், இருபாலையில் ஒழுங்கை ஒன்றில் நின்று 14 வயதுச் சிறுமியும் அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த இரு நபர்களில் ஒருவர் சிறுமியை சித்திரவதை செய்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார். மற்றையவர் சிறுமியின் நண்பரை மிரட்டி தடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த அசம்பாவிதம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் கோப்பாய் பொலிஸ் கடந்த 23ஆம் திகதி முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 26ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர்.

சிறுமியை வன்புணர்விற்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த  விண்ணப்பம் செய்தனர். குறித்த அணிவகுப்பின் போது சிறுமியும் அவரது நண்பரும் எந்தத் தயக்கமுமின்றி சந்தேகநபர்கள் இருவரையும் அடையாளம் காட்டினர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து மன்று உத்தரவிட்டது.