இந்தியாவில் வெங்காய விலை உயர்வு, தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், வெங்காயம் பதுக்கி வைப்பது தொடர்பில் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டதனையடுத்து பதுக்கலை தடுக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் 33 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பதுக்கல் வெங்காயங்களை கண்டுபிடிக்க அதிரடி வேதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வெங்காயம் பதுக்கினால் அந்த வியாபாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். தண்டனை பெற்ற வியாபாரிகள் கடைசி உரிமம் இரத்து செய்யப்படும்.