சமாதானத்தினை வலியுறுத்தி நடைப்பயணம்

20191211 082246
20191211 082246

சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை நடைபயனம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் மாதகல் சங்கமித்தா விகாரையில் இருந்து தனது தாயின் ஆசிர்வாதத்தோடு நடை பயனத்தை ஆரம்பித்துள்ளார்.

ஒரு சமாதான செய்தியை சிங்கள மக்களுக்கும் , நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைபயனத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார்.

நடைபயனத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்து நடைபயனத்தை ஆரம்பித்துள்ளனர்.