வவுனியாவில் தேசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் வீரர்களிற்கு பாதணிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இம்மாதம் 26 மற்றும் 27ம் திகதி நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவில் மரதன் மற்றும் வேகநடை ஆகிய போட்டிகளில் வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகளிற்கான ஒரு தொகுதி பாதணிகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட விளையாட்டு பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் ராஜா ரணசிங்க, வவுனியா மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சூக் மற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.