காங்கேசன்துறை கடற்பரப்பில் ஆங்காங்கே திரவப் பதார்த்தம் மிதப்பது அவதானிக்கப்பட்டது.
குறித்த பதார்த்தம் தொடர்பில் நாறா நிறுவனத்துக்கு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை மற்றும் அதனை அண்டிய பகுதி கடற்கரைகளில் வித்தியாசமான முறையிலான இரசாயன அல்லது உயிரியல் சார்ந்த படை ஒன்று மிதப்பது இன்று மாலை 2மணி முதல் அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான ஆய்வுகளில் கடல் கரையோர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினர் முன்னெடுத்துள்ளனர்.