ஆனையிறவு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே விபத்தில் காயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்