வவுனியா குருமன்காடு பகுதியில் கடந்த இரு தினங்களிற்கு முன்னர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதியை காவல்துறையினர் இன்னும் கைது செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நான்காம் திகதி இரவு குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய நீல நிற முச்சக்கரவண்டியின் சாரதி குறித்த இடத்தில் நிற்காமல் விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக காயமடைந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்விபத்து தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இரு தினங்கள் கடந்தும் விபத்தை ஏற்ப்படுத்திய நபரை கைது செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியின் (NP QU – 9554) இலக்கமும் காவல்துறையினருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.