இஸ்ரேலும் இலங்கையும் நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காணமாக மேற்கொள்ள முடியாமல் இருந்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக தூதரகங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த இடம்பெற்று வருகின்றது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகின்றது.