வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தகநிலையம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை வைத்திருந்த மூன்று பேர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த வியாபாரநிலையத்தில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த மூவரும் இராணுவப்புலனாய்வு பிரிவுனரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட 100 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது