சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களை கண்டுபிடிக்க விசேட நடமாடும் சேவையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கை இன்று மற்றும் எதிர் வரும் வார இறுதி நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்இ புத்தாண்டு நிகழ்வுகள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களிலும் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.