ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.
இதில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,200 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்தது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 267 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.