இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்று புதன்கிழமையுடன் இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகின்றது.
இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச சபையின் எற்பாட்டில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.