ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொண்டது இலங்கை அணி

t20 series
t20 series

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T-20 போட்டியில், இலங்கை அணி 37 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதற்கிணங்க முதலில் களமிறங்கிய இலங்கை அணி 08 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 37ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இலங்கை சார்பில் அணித்தலைவர் 6 ஒட்டங்களுக்கு 5விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக லசித் மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இத்தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது,