அரசாங்கத்தின் தேசிய கொள்கை வேலைத்திட்டமானது, பயனுள்ள பிரஜை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்க
விழுமியங்களைக் கொண்ட சமூகம் மற்றும் செழிப்பான தேசம் என்ற நான்கு வகையான இலக்குகளை அடைந்துகொள்ள 10 பிரதான கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது.
2020 – 2025 காலப்பகுதியில் விசேடபொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச்செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தேசியக் கொள்கை வேலைத்திட்டமானது தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முதன்மையான முன்னுரிமையினை வழங்குகின்றது.
எமது மக்கள் அனுபவிக்கின்ற ஜனநாயக ஏற்பாடுகளை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்காது தேசிய பாதுகாப்பினை பாதுகாப்பதற்கான புதிய செயன்முறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த புதிய கொள்கைபிரகடனத்தை பின்வரும் இணைய தள முகவரில் பார்வையிட முடியும்.
http://www.treasury.gov.lk/documents/10181/790200/policy+document+tamil.pdf/e42b3a4b-eaa6-4c59-bb04-65199a4c28fa