ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
நேற்று இவ்வாறு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது ஹம்பாந்தோட்டை நகரசபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரின் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக நாளொன்றுக்கு 50 தொன் திண்மக் கழிவுகளை கூட்டு உரமாக மாற்றக்கூடிய வகையில், இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த திட்டத்தின் நிர்மாணப்பணிகளை விரைவாக நிறைவு செய்து ஒரு மாதத்திற்குள் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, அதிகாரிகளுக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.