தமிழர்களை வெள்ளை வாகனத்தில் கடத்திச் சென்று முதலைக்கு இரையாக்கிய விவகாரத்தினை வெளியிடுவதற்காக 3 மில்லியன் ரூபா பணம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் தகவல் வெளியிட்டவர்கள் கைது சேய்யப்பட்டு 72 மணித்தியாலயங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதித்தது.
விசாரணையின் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை சிதைக்கும் நோக்கத்திற்காக, பணத்திற்கு ஒப்பந்தம் செய்ததாக அவர்கள் ஒப்புதல் வாக்குமூமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.