மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை மூன்று மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2,320 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அதில் 2023 நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.