இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அதிகாலை ஒரு மணியளவில் அறிவித்துள்ளது.
இதனால் இதுவரையில் கொரோனாத் தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (05-05-2021) பிற்பகல் 4 மணியளவில் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த 9 மணி நேரத்தில் அறிவிப்பாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.