புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட சுத்திகரிக்கப்படாத 230 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இன்று மீள் ஏற்றமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக ‘எவர்எதிக்’ என்ற கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
20 அடி நீளமான 12 எண்ணெய் தாங்கி கொள்கலன்கள் மூலம் 230 டன் நிறை கொண்ட எண்ணெய் மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
அப்லோரொக்சின் புற்றுநோய் வேதிப்பொருள் அடங்கிய 1,850 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெயை 3 நிறுவனங்கள் இறக்குமதி செய்திருந்தன.
அவற்றுள் 105 மெற்றிக் தொன் எண்ணெயை மலசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்ய எதிரிசிங்க நிறுவனம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.