வவுனியா பேருந்து நிலைய பொது மலசல கூடம் சுத்திகரிப்பு நடவடிக்கை

IMG d7d062d9be68404ab7c2015a798b16be V
IMG d7d062d9be68404ab7c2015a798b16be V

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடம் மதுப்பிரியர்களின் மது அருந்தும் இடமாக மாற்றமடைந்துள்ளது .

இன்று நடைபெற்ற சுத்திகரிப்பு நடவடிக்கையின் போது கால்வாய் சீர் செய்யும் நடவடிக்கையை நகரசபை உறுப்பினர் ரி.கே. இராஜலிங்கம் பார்வையிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள நகரசபையின் சபை அமர்வில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இதன்போது கால்வாயை அடைத்து பெருமளவு மதுபான போத்தல்கள் ,தண்ணீர் போத்தல்கள் என்பனவும் குவியலாக மீட்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள நகரசபை அமர்வில் குறித்த மலசலகூடத்திற்கான அடிப்படை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதுடன் கடந்த மூன்றாண்டு காலமாக புதிதாக மூன்று கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தினை திறந்து வைப்பதற்குரிய துரித நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ரி .கே . இராஜலிங்கம் தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் குறித்து நகரசபை தவிசாளர் , உப நகரபிதா , நகரசபை செயலாளர் ஆகியோருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் நகரசபை உறுப்பினர் சு . காண்டீபனும் நிலைமைகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் .