கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு நாளைய தினம் விலத்திக்கொள்ளப்படவுள்ள நிலையில் வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் சுகாதாரபிரிவினர், இராணுவம், காவற்துறையினரின் ஏற்பாட்டில் வவுனியா பேருந்து நிலையம் மற்றும் வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.