ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலிலிருந்து மூவர் விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஸாந்த ரணதுங்க ஆகியோரே இவ்வாறு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 20ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைவர், உபதலைவர் மற்றும் செயலாளர் முதலான பதவிகளுக்காக அவர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தேர்தல் குழுவிற்கு, கடிதம் ஒன்றை அனுப்பி, அவர்கள் தங்களது தீர்மானத்தை அறியப்படுத்தியுள்ளனர்.