சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஏபிடி வில்லியர்ஸ், மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடமாட்டார் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஏபிடி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து தமது ஓய்வை அறிவித்தார்.
எனினும், நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில், தென்னாபிரிக்கா சார்பில் மீண்டும் அவர் களமிறங்குவார் என்று தகவல் வெளியானது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஏபி டி வில்லியர்ஸ் உடன் நடத்தியுள்ளது.
எனினும், அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், தாம் மேற்கொண்ட தீர்மானத்தில் அவர் திட்டவட்டமாக இருப்பதாகவும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.