தடுப்பூசி, பிராணவாயு தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்

114557002 1d4676f3 ae90 40ff 9d02 b8381ae85eca
114557002 1d4676f3 ae90 40ff 9d02 b8381ae85eca

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்குரிய தடுப்பூசிகளையும், மருத்துவ பிராணவாயுவையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பிராணவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, தமிழகத்திலேயே பிராணவாயு உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், பிராணவாயு செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை, தொழில் கூட்டுமுயற்சி மூலம் உருவாக்க வேண்டும்.

இதற்கான ஆலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் அவர் கருத்துகளை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.