நாட்டில் வசிக்கும் விஷேட தேவையுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் அநீதி இழைக்கப்பட்ட குழுவினராக இவர்களை குறிப்பிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி பட்டியலில் இவர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் கூட வீழ்ச்சி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார்.