ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் திங்கட்கிழமை காலை நிலத்தடி ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
52 வயதான யசுஷி மோரியா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பிலான விசாரணை தற்சமயம் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் ஜப்பானிய சுகாதார அமைச்சகம் ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக தற்கொலை வழக்குகளில் அதிகரிப்பு இருப்பதாக அறிவித்தது.
2020 ஆம் ஆண்டில் 20,919 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.