இலங்கையில் 2021ஆம் ஆண்டு இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும்

Untitled 1.jpgioi
Untitled 1.jpgioi

2021ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடத்துக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடாத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்திருந்தது.

எனினும், தற்போது இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த போட்டித்தொடரை இலங்கையில் நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.