நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்ளும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சீரற்ற வானிலையால் தாமதமடைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்தது.
இதற்கமைய, 17 போட்டிகளில் 12 இல் வெற்றிப்பெற்று 520 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணியும், 11 போட்டிகளில் 7இல் வெற்றிப்பெற்று 420 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூஸிலாந்து அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு சதம்டனில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும் சீரற்ற வானிலையால் போட்டி தாமதமடைந்துள்ளது.