சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 76,000 சிகரெட்டுகள் இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதியானது சுமார் 25 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கெலிஓயா பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் இந்த சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.