மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு முன்பாக அமைந்துள்ள சிகையலங்கார நிலையமொன்றை உடைத்து, அங்கிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவரை மொரட்டுமுல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபரால் திருடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.