இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 2ஆவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கார்டிப்பில் இரவு நேர ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில், நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.